தர்மபுரி, ஜன.20: தர்மபுரி மாவட்ட அனைத்து வாகன ஓட்டுநர்கள் சங்கம் சார்பில், ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கும் ஹிட் அண்டு ரன் என்னும் புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி தலைமையில் 50 பேர் கலந்து கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்து சின்னசாமி, ராஜா, ராமசுந்தரம் உள்பட 50 பேரையும் கைது செய்தனர். பின்னர், அவர்களை விடுவித்தனர்.
The post ஆர்ப்பாட்டம் நடத்திய 50 டிரைவர்கள் கைது appeared first on Dinakaran.